வடக்கு பிரான்ஸ் பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு!
வடக்கு பிரான்ஸ் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.வடக்கு பிரான்சின் கடலோர பகுதியில் அமைந்த ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெர்சி மாகாண தலைமை பொலிஸ் அதிகாரி ராபின் ஸ்மித் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை 20 முதல் 30 பேர் வரை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பின்போது, கட்டிடத்தின் வழியே நடந்து சென்றவர்களில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் குண்டுவெடிப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை எனவும் பொலிஸார் இது பற்றிய விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.